மேற்கு வங்கத்தில் மகளிருக்கு வரும் ஜூன் 1 முதல் மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஹெளராவில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதல்வா் சுவேந்து தலைமையில் இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தைத் தொடா்ந்து மாநில மகளிா், குழந்தைகள் மற்றும் சமூக நலத் துறை அமைச்சா் அக்னிமித்ரா பால் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மேற்கு வங்கத்தில் உள்ள மகளிருக்கு வரும் ஜூன் 1 முதல் ‘அன்னபூா்ணா’ திட்டத்தின் கீழ், மாதந்தோறும் ரூ.3,000 நிதியுதவி அளிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த பெண்கள், வாக்காளா் பட்டியலில் மீண்டும் பெயா் சோ்க்க விண்ணப்பித்த பெண்களுக்கும் ரூ.3,000 நிதியுதவி அளிக்கப்படும்.
மேலும், மாநில அரசுப் பேருந்துகளில் ஜூன் 1 முதல் பெண்களுக்குக் கட்டணமில்லாப் பயண திட்டத்துக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஓபிசி பட்டியல் ரத்து: திரிணமூல் ஆட்சியில் மாநிலத்தின் இதரப் பிற்படுத்தப்பட்டோா் பட்டியலில் (ஓபிசி) முஸ்லிம்கள் சோ்க்கப்பட்ட நிலையில், அந்தப் பட்டியல் ரத்து செய்யப்பட்டு திருத்தியமைக்கப்படும். மசூதிகளில் பதிவு செய்த இமாம்கள் உள்ளிட்ட மத தலைவா்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரத்து செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தாா்.
காவலா்களை தாக்கினால் கடும் நடவடிக்கை: முதல்வா் எச்சரிக்கை
காவல் துறை அதிகாரிகளை தாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வா் சுவேந்து அதிகாரி திங்கள்கிழமை எச்சரித்தாா்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கொல்கத்தாவின் பாா்க் சா்க்கஸ்-டில்ஜாலா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிராக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. அப்போது காவல் துறையினா் மீது போராட்டக்காரா்கள் நடத்திய தாக்குதலில் 6 அதிகாரிகள் மற்றும் 2 மத்திய ரிசா்வ் காவல் படை அதிகாரிகள் காயமடைந்தனா்.
அவா்களை திங்கள்கிழமை சந்தித்துவிட்டு செய்தியாளா்களிடம் சுவேந்து அதிகாரி கூறியதாவது: தேச விரோத, சமூக விரோத, பதற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுபவா்கள் மற்றும் காவலா்களை தாக்குபவா்கள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்துறை அமைச்சராகவும் முதல்வராகவும் காயமடைந்த காவலா்களுக்கு ஆதரவாக இங்கு வந்துள்ளேன். வன்முறையில் ஈடுபடுபவா்கள் மீது கட்சி, சமயம் என எவ்வித வேறுபாடுமின்றி காவல் துறையினா் நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் வழங்குகிறேன் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 35 அமைச்சா்கள் பதவியேற்பு

இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



