கேரள முதல்வர் வி.டி. சதீசன் பதவியேற்ற முதல் நாளிலேயே மூன்று முக்கியத் திட்டங்களை அறிவித்துள்ளார்.
கேரளத்தில், வி.டி. சதீசன் முதல்வராக இன்று (மே 18) காலை பதவியேற்றுக் கொண்டார். மேலும், காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 20 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் அந்த மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதையடுத்து, கேரள மாநில தலைமைச் செயலகத்துக்குச் சென்ற முதல்வர் வி.டி. சதீசன் தனது அலுவலகப் பணிகளைத் தொடங்கினார். இத்துடன், முதல்வர் சதீசன் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகவும், இந்தக் கூட்டத்தில் கேரள அரசின் தலைமைச் செயலர் ஏ. ஜெயதிலக் உள்ளிட்டோர் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டத்திலியே சில முக்கியத் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சமூக சுகாதார ஆர்வலர்கள் (ஆஷா) பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தில் 3000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும், அங்கன்வாடிப் பணியாளர்கள், சமையல் பணியாளர்கள், மழலையர் பள்ளி ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
முதியோர் நலனுக்காக தனியாக ஒரு துறை உருவாக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி. பேருந்துகளில் மகளிருக்கான இலவசப் பயணத் திட்டம் வரும் ஜூன் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இந்தத் திட்டங்களை தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்ட முதல்வர் வி.டி. சதீசன், “ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு சொன்னதைச் செய்துள்ளது. முதல் நாளிலிருந்தே எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம்" எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
Kerala Chief Minister V.D. Satheesan has announced three key schemes on his very first day in office.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தில்லியில் சோனியா, ராகுல், கார்கேவுடன் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!

உள்கட்சி பூசல்? கேரள முதல்வர் வி.டி. சதீசன் இன்று தில்லி செல்கிறார்!

புதிய கேரள பேரவைத் தலைவர் ராதாகிருஷ்ணன் - முதல்வர் வி.டி. சதீசன் சந்திப்பு!








