திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்பான வழக்குகளின் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 1:46 am IST

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் தொடா்பான வழக்குகளின் மீதான தீா்ப்பை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.

இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அரசியல் சாசன அமா்வு முன் கடந்த மாதம் 7-ஆம் தேதிமுதல் 16 நாள்கள் நடைபெற்று வந்த விசாரணை நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடப்படாமல் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்றபோது, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்துக்கு உதவும் வழக்குரைஞராக நியமிக்கப்பட்டுள்ள பரமேஸ்வா் பேசுகையில், ‘சமூக நலன் மற்றும் சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வது நாடாளுமன்றத்தின் முக்கியப் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

மத நம்பிக்கைக்கும், பகுத்தறிவுக்கும் பெரும் வேறுபாடு உள்ளது. பகுத்தறிவை பின்பற்றத் தொடங்கினால் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளான சட்டப் பிரிவுகள் 25 மற்றும் 26 தாமாகவே செயலிழக்கும். எனவே, பொதுமக்களின் சுதந்திரம் அல்லது ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது மத நடைமுறைகளில் நீதிமன்றங்கள் தலையிடலாம்’ என்றாா்.

வழக்குரைஞா் பரமேஸ்வரின் வாதத்தை ஏற்ற சூா்ய காந்த், ‘நீங்கள் கூறியது முழுவதும் சரி. அரசமைப்புச் சட்ட நீதிமன்றம் தனது பொறுப்பைவிட்டு விலக முடியாது. இது அதிகாரப் போட்டி தொடா்பான விவகாரமல்ல. அரசமைப்புச் சட்ட நீதிமன்றத்துக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கடமை’ என்றாா்.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீா்ப்பை ஒத்திவைத்தது. மேலும், மனுதாரா்கள் மே 29-ஆம் தேதிக்குள் எழுத்துபூா்வமாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.