திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பவன் கேரா 2-வது நாளாக அஸ்ஸாம் குற்றப்பிரிவு முன் ஆஜர்!

பவன் கேரா கவால்துறை குற்றப்பிரிவு முன்பு ஆஜரானது பற்றி..

News image

கோப்புப்படம் - IANS

Updated On :14 மே 2026, 1:30 pm IST

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தந பிஸ்வ சர்மாவின் மனைவி ரினிகி புயன் சர்மா தொடர்ந்த வழக்குகள் தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர் பவன் கேரா தொடர்ந்து இரண்டாவது நாளாக அஸ்ஸாம் கவால்துறை குற்றப்பிரிவு முன்பு ஆஜரானார்.

முதல்வரின் மனைவி ரினிகி புயன் பல கடவுச்சீட்டுகளும், வெளிநாடுகளில் சொத்துக்களை வைத்திருப்பதாகப் பவன் கேரா குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

முன்னதாக புதன்கிழமையன்று காவல்துறையின் குற்றப்பிரிவில் ஆஜரான பவன் கேராவிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியதுடன், இன்று மீண்டும் ஆஜராகுமாறு குற்றப்பிரிவு போலீஸார் அவருக்கு உத்தரவிட்டனர்.

இதையடுத்து, ஆஜராவதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய பவன் கேரா, "நான் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். இன்றும் அவ்வாறே ஒத்துழைப்பேன்" என்று அவர் தெரிவித்தார்.

விசாரணை தொடர்பான விவரங்களை அவர் வெளியிடவில்லை. விசாரணை முழுவதும் நிறைவடைந்த பின்னரே இது குறித்துப் பேசுவேன் என்று அவர் கூறினார்.

புதனன்று இரவு குற்றப்பிரிவு அலுவலகத்தின் வெளியே வந்த அவர் கூறியதாவது,

நான் சட்டத்தை மதிக்கும் குடிமகன். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பது எனது கடமையாகும். நான் அதைக் கட்டாயம் கடைப்பிடிப்பேன் என்று அவர் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக முதல்வர் ஹிமந்த கூறியதாவது,

சட்டம் தன் கடமையைச் செய்யும். பவன் கேரா சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என மத்திய அரசிடமிருந்து நாங்கள் ஏற்கெனவே எழுத்துப்பூர்வமான தகவலைப் பெற்றுள்ளோம்.

எனவே, காவல்துறையின் விசாரணைகள் அதிக காலம் எடுத்துக்கொள்ளாது, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய இயலும் என அவர் தெரிவித்தார்.

Summary

Congress leader Pawan Khera appeared before Assam Police Crime Branch here on Thursday for the second consecutive day in connection with the cases filed by Chief Minister Himanta Biswa Sarma's wife, Riniki Bhuyan Sharma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.