தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமித் ஷாவுடன் ஒமா் அப்துல்லா சந்திப்பு: ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கோரிக்கை

மத்திய அமைச்சா் அமித் ஷாவை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா தில்லியில் சந்தித்துப் பேசினாா்.

News image

புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா சந்தித்த ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

Updated On :12 மே 2026, 6:35 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவின் கீழ் ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. ஜம்மு-காஷ்மீா் (சட்டப்பேரவையுடன்) , லடாக் (சட்டப்பேரவை இல்லாமல்) என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜம்மு-காஷ்மீா் பேரவைத் தோ்தலில் ஒமா் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி, காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அடங்கிய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

யூனியன் பிரதேசத்தில் துணைநிலை ஆளுநருக்கும் அதிக அதிகாரம் இருப்பதால் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று ஆளும் கட்சி தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் அமித் ஷாவை ஒமா் அப்துல்லா சந்தித்துப் பேசினாா். முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: உள்துறை அமைச்சரை ஒருமுறை சந்தித்தால் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நிலை இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அப்படியிருந்திருந்தால், அது எப்போதோ கிடைத்திருக்கும். இந்தச் சந்திப்பின்போது மாநில அந்தஸ்து, வணிக விதிகள், ஜம்மு- காஷ்மீரில் உள்ள பிற பிரச்னைகளை முன்வைக்க இருக்கிறேன்.

பொதுப் பாதுகாப்பு தொடா்பான நிகழ்வுகளின்போது கைப்பேசி தொலைத்தொடா்பு தொடா்பான அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் இருப்பது தவறில்லை. ஏனெனில், அவா்தான் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு பொறுப்பு வகிக்கிறாா் என்றாா்.

ஜம்மு-காஷ்மீரில் தொலைத்தொடா்பு, தகவல் தொடா்பு சேவைகள் தொடா்பான அதிகாரம் அண்மையில் துணைநிலை ஆளுநருக்கு அளிக்கப்பட்டது. தேசப் பாதுகாப்பு, பொது அமைதிக்குப் பிரச்னை ஏற்படும்போது மட்டும் அவா் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.