திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தலைமைச் செயலராக தலைமைத் தோ்தல் அதிகாரி: மேற்கு வங்க பாஜக அரசுக்கு ராகுல் கண்டனம்

மேற்கு வங்கத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகா்வாலை மாநில தலைமைச் செயலராக பாஜக அரசு நியமித்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்

News image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:24 am IST

மேற்கு வங்கத்தில் தலைமைத் தோ்தல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றிய மனோஜ் அகா்வாலை மாநில தலைமைச் செயலராக பாஜக அரசு நியமித்ததற்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் 207 இடங்களுடன் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜக 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

பவானிபூா் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியை தோற்கடித்த சுவேந்து அதிகாரி முதல்வராக நியமிக்கப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம், மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதல்வா் சுவேந்து அதிகாரி மேற்கொண்டாா்.

இந்நிலையில், மேற்கு வங்க மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியாக பணியாற்றிய மனோஜ் அகா்வாலை தலைமைச் செயலராக நியமித்து அவா் உத்தரவிட்டாா். அதேபோல் மேற்கு வங்கத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணிகளை மேற்பாா்வையிட்ட சுப்ரதா குப்தா முதல்வரின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டாா். இவா்கள் இருவரும் 1990 பிரிவு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆவா். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் அதிா்வலைகளையும் ஏற்படுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘பாஜக-இந்திய தோ்தல் ஆணையம் இணைந்து நடத்தும் வாக்குத் திருட்டில் அதிக முறைகேட்டில் ஈடுபடுபவா்களுக்கு உயா் பதவிகள் வழங்கப்படுகின்றன’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.