தமிழ் செய்திகள்
நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவராக அசோக் குமார் லஹிரி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
சுமன் பெர்ரிக்குப் பதிலாக அசோக் குமார் லஹிரி இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
நீதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் லஹிரி மேற்கு வங்க பாஜக எல்எல்ஏவும், மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும், 15-வது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றியவர்.
இதுதொடர்பாக நீதி ஆயோக் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
அசோக் குமார் லஹிரி கல்வித் துறை, பொது நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் எனப் பல்வேறு தளங்களில் அவருக்குள்ள அனுபவம், ஆதாரம் சார்ந்த கொள்கை உருவாக்கம் மற்றும் பொருளாதார மாற்றத்தை நோக்கிய நீதி ஆயோக்கின் முயற்சிகளை மேலும் வலுப்படுத்தும்.
இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதிலும், பல்வேறு துறைகள் சார்ந்த உத்திசார் கொள்கை முன்னெடுப்புகளுக்கு ஆதரவளிப்பதிலும் அசோக் லஹிரியின் பங்களிப்புகளை நீதி ஆயோக் ஆவலுடன் எதிர்நோக்குகிறது என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Renowned economist Ashok Kumar Lahiri on Friday took charge as Vice Chairman of NITI Aayog.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









