ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து கே.எல்.ராகுல் சதம் வீண்: டெல்லிக்கு எதிராக இமாலய இலக்கை துரத்திப் பிடித்த பஞ்சாப்! டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!மக்கள் எதிர்பார்த்த விடுதலை மே 4-ல் கிடைக்கும்: நிர்மல் குமார்அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்குதிமுகவே மீண்டும் ஆட்சி; விஜய்யால் அரசியல் சூழல் மாறும்: திருமாவளவன்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு
/

நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!

மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்

News image

பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் நீதி ஆயோக் துணைத் தலைவர் - @narendramodi

Updated On :25 ஏப்ரல் 2026, 4:01 pm

புது தில்லி : நீதி ஆயோக் (மத்திய கொள்கைக் குழு) துணைத் தலைவராக மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவும் மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகருமான அசோக் குமார் லஹிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் (2021-ஆம் ஆண்டில்) பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட அசோக் லஹிரி அதில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி எம்எல்ஏவாக உள்ளார். ஆனால், அவர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

இந்நிலையில், நீதி ஆயோக் துணைத் தலைவா் பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து அவர் இன்று (ஏப். 25) வாழ்த்து பெற்றார்.

நீதி ஆயோக் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அசோக் லஹிரி மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக மட்டுமின்றி 15-ஆவது நிதி ஆணையத்தின் உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

அதே மாநிலத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோவர்த்தன் தாஸ் நீதி ஆயோக்கின் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கோவர்த்தன் தாஸ் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் மேற்கு வங்கத்தை மையமாக வைத்து நீதி ஆயோக் உறுப்பினர்கள் நியமனத்தை மத்திய அரசு மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து விமர்சனமும் எழுந்துள்ளது.

Summary

Govt reconstitutes Niti Aayog New Delhi: The government has reconstituted the Niti Aayog, appointing former chief economic advisor Ashok Kumar Lahiri as vice chairman and five full-time members, including economist K V Raju, Director of AIIMS M Srinivas and Abhay Karandikar, Secretary, Department of Science and Technology.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.