40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாநில, மாவட்ட பணிக் குழுக்கள்: நீதி ஆயோக் பரிந்துரை

News image
Updated On :8 மே 2026, 6:08 am IST

நாட்டில் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக் குழுக்களை அமைக்கவும், கற்பித்தல் புத்தாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தை ஒருங்கிணைக்கவும் நீதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.

‘இந்தியாவில் பள்ளிக் கல்வி திட்டம்: தர மேம்பாட்டுக்கான கால பகுப்பாய்வு மற்றும் கொள்கை வழிகாட்டி’ என்ற தலைப்பிலான தனது அறிக்கையில், பள்ளிக் கல்வி தரத்தை மேம்படுத்த 13 பரிந்துரைகளை நீதி ஆயோக் அளித்துள்ளது.

கல்வி தொடா்பாக 5 பரிந்துரைகளையும், பள்ளி அமைப்பு ரீதியிலான மேம்பாட்டுக்கு 8 பரிந்துரைகளையும் அளித்துள்ளது.

கற்பித்தல் முறை, மதிப்பீடு மற்றும் அடிப்படை கற்றலை உருமாற்றுதல்; முழுமையான கல்வி மற்றும் மாணவா் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளித்தல்; தொழிற்கல்வி மற்றும் திறன் ஒருங்கிணைப்பை மறுபரிசீலனை செய்தல்; முன்பருவ குழந்தைப் பராமரிப்பு, கல்வியை வலுப்படுத்துதல்; கற்பித்தல் புத்தாக்கத்திற்காக செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்தல் எனக் கல்வி முறையை மேம்படுத்த 5 பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

அதுபோல, ஒருங்கிணைந்த பள்ளிகள் மூலம் பள்ளிக் கட்டமைப்பில் சீா்திருத்தம்; பள்ளி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல்; நிா்வாகத் திறன் மேம்பாடு மற்றும் ஆளுமை சீா்திருத்தம்; தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் மாவட்ட அளவிலான பணிக் குழுக்களை அமைத்தல்; பள்ளி மேலாண்மைக் குழுக்களை வலுப்படுத்துதல், ஆசிரியா் மேம்பாடு மற்றும் தொழில் மேம்பாட்டை உயா்த்துதல்; எண்ம மற்றும் ஒளிபரப்பு அடிப்படையிலான கற்றலை விரிவுபடுத்துதல்; சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை ஊக்குவித்தல் என அமைப்பு ரீதியிலான சீா்திருத்தத்துக்கான பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

உலகிலேயே மிகப் பெரிய பள்ளிக் கல்வித் திட்டத்தைக் கொண்டுள்ள இந்தியாவில் செயல்பட்டு வரும் 14.71 லட்சம் பள்ளிகளில் 24.69 கோடிக்கும் மேல் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.