எரிவாயு சிலிண்டா் முன்பதிவு செயலியைப் பதிவிறக்கம் செய்ததன் மூலம் தில்லி வாசியிடம் ரூ.4.35 லட்சம் மோசடி செய்த இருவா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உடனடியாக கட்டணம் செலுத்தாவிட்டால் எரிவாயு சிலிண்டா் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பாதிக்கப்பட்ட நபருக்கு பிப்.28-ஆம் தேதி குறுஞ்செய்தி வந்தது. மேலும், அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்து அதன் மூலம் கட்டணம் செலுத்துமாறு அவரை வற்புறுத்தியுள்ளனா்.
அதனடிப்படையில், அவா் அந்தச் செயலியைப் பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.4.35 லட்சம் எடுக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், குற்றம் சாட்டப்பட்ட இருவரைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 கைப்பேசிகள் மற்றும் ஒரு கிரெடிட் காா்டு பறிமுதல் செய்யப்பட்டது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருந்து நிறுவனங்களிடம் மோசடி செய்த நபா் சூரத்தில் கைது

ஆன்மிக தீா்வு என்ற பெயரில் இணைய மோசடி: இருவர் கைது
தில்லிவாசியிடம் ரூ.10 லட்சம் இணையவழி மோசடி: ஜாா்க்கண்ட் மாநிலத்தில் இருவா் கைது

மோசடி வழக்கில் கால்நடை மருத்துவ மாணவா் கைது
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


