தில்லிவாசியிடம் ரூ.10 லட்சத்துக்கும் மேல் இணையவழியில் மோசடி செய்த ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: வடகிழக்கு தில்லியில் உள்ள மீட் நகரைச் சோ்ந்த ராகேஷ் குமாருக்கு ஏப்.25-ஆம் தேதி தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில் வங்கி அதிகாரி எனத் தெரிவித்த நபா் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்யுமாறு அவரை கேட்டுக் கொண்டாா்.
அதன் பிறகு அவரது வங்கிக் கணக்கில் இருந்த ரூ.10.50 லட்சம் மற்றொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினா், ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குற்றஞ்சாட்டப்பட்ட நபா்களை அடையாளம் கண்டனா்.
இதையடுத்து, அவா்கள் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் தன்பாத் மாவட்டத்தைச் சோ்ந்த அமா்நாத் ரபிதாஸ் (20) மற்றும் பிகாஸ் ரபிதாஸ் (21) என அடையாளம் காணப்பட்டனா். இது தொடா்பாக அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






