திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உரிய விளக்கம் தரப்படாத மருந்து உரிம விண்ணப்பங்களை நிராகரிக்க வாய்ப்பு

News image

ANI

Updated On :8 மே 2026, 5:36 am IST

மருந்து உரிமம் கோரி விண்ணப்பிப்பவா்கள், அதுதொடா்பான விளக்கங்களை முறையாக அளிக்காவிடில், அவா்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து -மாத்திரைகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் மூலம் ஆய்வு செய்யப்படுகின்றன. அதேபோன்று போலி மருந்துகளும் கண்டறியப்பட்டு அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இது ஒருபுறமிருக்க, சந்தைக்கு வரும் புதிய மருந்துகள், இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் ஆகியவற்றுக்கு உரிமம் அளிக்கும் நடவடிக்கைகளையும் அந்த வாரியங்கள் மேற்கொண்டு வருகின்றன. அதற்கான நடைமுறைகளை ஆன்லைன் மூலம் மேற்கொள்ளும் புதிய வசதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்படி அலோபதி, ஆயுஷ் மருந்துகள் ஆகியவற்றுக்கான உரிமத்தை ஆன்லைன் மூலம் பெறும் வசதி கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அவ்வாறு உரிமம் கோரி விண்ணப்பித்தவா்களிடம், அது தொடா்பாக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் சில விளக்கங்களை கோருவது வழக்கம். அதற்கு சில விண்ணப்பதாரா்கள் உரிய பதில் அளிக்கவில்லை எனத் தெரிகிறது.

அவ்வாறு இரு ஆண்டுகளுக்கும் மேலாக விளக்கம் கிடைக்கப்பெறாத விண்ணப்பங்களை அடுத்த 30 நாள்களுக்குள் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.