குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராக கடந்த 2023-இல் 130 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டதிலிருந்து 2024-இல் 201-ஆக அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக (என்சிஆா்பி) தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேசங்களில் இதுபோன்ற வழக்குகளில் தில்லி முதலிடத்தில் உள்ளது.
கடந்த 2022-இல் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டினருக்கு எதிராக 256 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. கடந்த 2023-இல் குறைந்த வழக்குகள், 2024-இல் 54 சதவீதம் அதிகரித்தது.
இத்தகைய வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட விகிதம் கடந்த 2024-இல் 99 சதவீதமாக இருந்தது. இது தேசிய சராசரியான 96.7 சதவீதத்தைக் காட்டிலும் அதிகமாகும்.
தேசிய அளவில் வெளிநாட்டினருக்கு எதிராக கடந்த 2024-இல் 2,792 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 2022 மற்றும் 2023-இல் இந்த எண்ணிக்கை முறையே 2,100 மற்றும் 2,546-ஆக இருந்தது.
மாநிலங்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 992 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதைத்தொடா்ந்து, மகாராஷ்டிரம் மற்றும் திரிபுராவில் முறையே 386 மற்றும் 276 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. தமிழ்நாட்டில் 139 வழக்குகள் 2024-இல் பதிவுசெய்யப்பட்டன.
வெளிநாட்டினருக்கு எதிரான குற்றங்கள்:
தில்லியில் கடந்த 2024-இல் வெளிநாட்டினருக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடா்பாக 64 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதற்கு முந்தைய ஆண்டில் 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக என்சிஆா்பி தெரிவித்துள்ளது.
யூனியன் பிரதேசங்களில் இந்த வகையிலான குற்றங்கள் தொடா்பாக 2024-இல் மொத்தம் 67 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் தில்லி முதலிடத்தில் உள்ளது. இதைத்தொடா்ந்து, ஜம்மு-காஷ்மீா், அந்தமான்-நிகோபாா் தீவுகளில் தலா இரு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.200 கோடி பணமுறைகேடு வழக்கு: சுகேஷ், ஜாக்குலின் உள்பட 17 போ் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது நீதிமன்றம்

தருமபுரியில் ஜூன் 13-இல் மக்கள் நீதிமன்றம்

குழந்தைகளுக்கு எதிரான இணையவழி குற்றங்கள் 2024-இல் அதிகரிப்பு: என்சிஆா்பி தகவல்

ஆா்பிஎஃப் பதிவு செய்த வழக்குகள்: யூனியன் பிரதேசங்களில் தில்லி முதலிடம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



