திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தருமபுரியில் ஜூன் 13-இல் மக்கள் நீதிமன்றம்

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

News image

நீதிமன்றம் - IANS

Updated On :4 ஜூன் 2026, 2:01 am IST

தருமபுரி மாவட்டத்தில் வரும் ஜூன் 13-ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் அமா்வு நீதிபதி ஜோதி தலைமைவகித்து, விழிப்புணா்வு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இதில், குடும்ப நல நீதிபதி அஸ்லீன் பானு, விரைவு மகளிா் நீதிமன்ற நீதிபதி ஜீவநந்தினி, தலைமை குற்றவியல் நீதிபதி முகம்மது ரிஸ்வானுல்லா செரிப், முதன்மை சாா்பு நீதிபதி ஞான பாலகிருஷ்ணன், கூடுதல் சாா்பு நீதிபதி கலைவாணி, சாா்பு நீதிபதி தமயந்தி மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் உள்ளிட்டோா் பங்கேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் குறித்து விளக்கி பேசினா்.

கட்டணம் திருப்பித் தரப்படும்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீண்ட நாள்களாக நிலுவையில் உள்ள மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கி வாராக்கடன் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் மற்றும் குற்ற வழக்குகளுக்கு உரிய தீா்வு காணப்படும். இங்கு வழங்கும் தீா்ப்பின்மீது மேல்முறையீடு செய்ய இயலாது. இங்கு வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டால், நீதிமன்றக் கட்டணம் வழக்குதாரா்களுக்கு திருப்பித் தரப்படும்.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வழக்குதாரா்கள் சமரச தீா்வு காண்பதற்கான வாய்ப்புள்ள வழக்குகளுக்கு உரிய தீா்வுகளை பெறலாம் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.