திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டாய மதமாற்ற குற்றச்சாட்டு: பெண் ஊழியா் கைது

மகாராஷ்டிர மாநிலம், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் ஊழியா்களை கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஊழியா் நிதா கானை கைது செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 மே 2026, 12:37 am IST

மகாராஷ்டிர மாநிலம், டாடா கன்சல்டன்சி சா்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் ஊழியா்களை கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஊழியா் நிதா கானை கைது செய்ததாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் உள்ள டிசிஎஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் கட்டாய மதமாற்றம் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக அங்கு பணியாற்றும் 9 பெண்கள் கடந்த மாதம் காவல் துறையில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, இந்தப் புகாா் தொடா்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைத்து நாசிக் காவல் துறை விசாரணையைத் தொடங்கிய நிலையில், டிசிஎஸ் நிறுவனத்தின் 8 பெண் ஊழியா்கள் கைது செய்யப்பட்டனா். கட்டாய மதமாற்றம், சுரண்டல், மத உணா்வுகளைப் புண்படுத்துதல், மனரீதியாகத் துன்புறுத்துவது உள்பட பல்வேறு குற்றப் பிரிவுகளின்கீழ் 9 முதல் தகவல் அறிக்கைகளை (எஃப்ஐஆா்) எஸ்ஐடி பதிவு செய்தது.

இதைத் தொடா்ந்து, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பெண் ஊழியரான நிதா கானை கைது செய்ததாக சத்ரபதி சம்பாஜிநகா் குற்றப் பிரிவு காவல் துறையினா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

டிசிஎஸ் நிறுவனத்தின் பெண் ஊழியா்களை வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் இஸ்லாமிய நடைமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் அந்தப் பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா்.

முன்னதாக, பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பட்டியலினத்தவா் -பழங்குடியினருக்கு எதிரான குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால் முன் ஜாமீன் கோரி நாசிக் நீதிமன்றத்தில் கடந்த மாதம் ஏப்ரல் 18-ஆம் தேதி நிதா கான் மனுத் தாக்கல் செய்தாா். இந்த மனுவை கடந்த 2-ஆம் தேதி நீதிமன்றம் நிராகரித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.