திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உ.பி.யில் 36 மணிநேரத்தில் 8 என்கவுன்டர்கள் செய்த போலீஸ்! 10 பேர் படுகாயம்!

உத்தரப் பிரதேசத்தில் 36 மணிநேரத்தில் காவல் துறையினர் நடத்திய 8 என்கவுன்டர்கள் குறித்து...

News image

முசாபர்நகர் மாவட்டத்தில் 36 மணிநேரத்துக்குள் 8 என்கவுன்டர்கள் நடத்திய காவல் துறையினர்... - கோப்புப் படம்|ENS

Updated On :7 மே 2026, 8:44 pm IST

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில், 36 மணிநேரத்துக்குள் காவல் துறையினர் நடத்திய 8 என்கவுன்டர் நடவடிக்கைகளில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முசாபர்நகர் மாவட்டத்தில், கொள்ளை, வழிப்பறி, கால்நடை கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, 8 என்கவுன்டர் நடவடிக்கைகளை அம்மாநில காவல் துறையினர் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கைகள் மூலம் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கைதானவர்களில் 10 பேர் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முசாபர்நகரின் புதானா, மன்சூர்பூர், நை மண்டி மற்றும் ஷாஹ்பூர் காவல் நிலையங்களின் பகுதிகளில் நடைபெற்றதாகவும், இதுபற்றிய முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, உத்தரப் பிரதேசத்தில் கால்நடை கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது பசுவதையைத் தடுப்பதாகக் கூறி காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

In the Muzaffarnagar of UP 10 people have been critically injured in eight encounter operations conducted by the police.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.