பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

மேற்கு வங்கத்தில் எந்தத் தொகுதியில் ராஜிநாமா? “பாஜக தலைமை தீர்மானிக்கும்” - சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் வெற்றி: 10 நாள்களில் ராஜிநாமா: சுவேந்து அதிகாரி

News image

சுவேந்து அதிகாரி - PTI

Updated On :6 மே 2026, 5:46 pm IST

கொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அடுத்த 10 நாள்களில் வெற்றியை ராஜிநாமா செய்யவுள்ளதாக புதன்கிழமை(மே 6) தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 293 தொகுதிகளிலும் கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தொடர்ச்சியாக ஆளுங்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

இதையடுத்து மேற்கு வங்கத்தில் புதிதாக வரும் மே 9-ஆம் தேதி பாஜக அரசு பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூரிலும் நந்திகிராமிலும் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய சுவேந்து அதிகாரி இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் எந்தத் தொகுதியில் ராஜிநாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இது குறித்து, புதன்கிழமை(மே 6) சுவேந்து அதிகாரி பேசியதாவது : “இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் இன்னும் 10 நாள்களில் ராஜிநாமா செய்வேன். எந்தத் தொகுதியைத் தக்க வைக்க வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். பவானிபூர் மற்றும் நந்திகிராம் மக்களுக்கான எமது பொறுப்புணர்வை நான் மறக்க மாட்டேன்” என்றார்.

Summary

Will vacate one of two assembly seats won in 10 days: BJP's Suvendu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.