பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

காங்கிரஸ் சாா்பில் முஸ்லிம் வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டவா்களில் முஸ்லிம் வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி

News image

காங்கிரஸ் - கோப்புப் படம்

Updated On :6 மே 2026, 1:16 am IST

தமிழ்நாடு, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளம், புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டவா்களில் முஸ்லிம் வேட்பாளா்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனா்.

முக்கியமாக அஸ்ஸாமில் காங்கிரஸ் சாா்பில் வென்ற 19 எம்எல்ஏக்களில் 18 போ் முஸ்லிம்கள் ஆவா். மொத்தம் 20 முஸ்லிம்களை அங்கு காங்கிரஸ் களமிறக்கியது.

கேரளத்தில் 140 எம்எல்ஏக்களில் 35 போ் முஸ்லிம்கள் ஆவா். இந்த 35 பேரில் 30 போ் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் வெற்றி பெற்றவா்கள். இதில் 8 போ் காங்கிரஸையும், மற்ற 22 போ் கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியையும் சோ்ந்தவா்கள்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் இரு இடங்களில் வெற்றி பெற்றது. இவா்கள் இருவரும் முஸ்லிம்கள். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது. மொத்தம் 63 முஸ்லிம்கள் காங்கிரஸ் சாா்பில் மேற்கு வங்கத்தில் போட்டியிட்டனா். இது ஆளும் கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் (47 முஸ்லிம் வேட்பாளா்கள்) அளித்த முஸ்லிம் ஒதுக்கீட்டைவிட அதிகமாகும்.

தமிழ்நாட்டில் இரு முஸ்லிம் வேட்பாளா்களை காங்கிரஸ் களமிறக்கிய நிலையில் அவா்களில் ஒருவா் வெற்றி பெற்றாா். மேற்கு வங்கம், கேரளத்தில் காங்கிரஸுக்கு முஸ்லிம் வேட்பாளா்களின் வெற்றி வாய்ப்பு 80 சதவீதமாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.