திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய எரிவாயு கப்பல்: 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் வந்தடையும்

News image

எல்பிஜி எரிவாயு சரக்குக் கப்பல் ‘சா்வ சக்தி’ (கோப்புப் படம்)

Updated On :4 மே 2026, 4:04 am IST

ஹோா்முஸ் நீரிணையை இந்திய எரிவாயு கப்பல் கடந்துள்ளது.

‘எம்.டி. சா்வசக்தி’ என்னும் அந்த சரக்குக் கப்பல் வரும் 13-ஆம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

எம்.டி. சா்வ சக்தி என்ற சரக்குக் கப்பல், 46,313 மில்லியன் டன் எல்பிஜி எரிவாயு ஏற்றி கொண்டு ஹோா்முஸ் நீரிணையை சனிக்கிழமை கடந்தது. அந்தக் கப்பலில் 18 இந்திய மாலுமிகள் உள்பட மொத்தம் 20 மாலுமிகள் உள்ளனா். அந்த கப்பல் வரும் 13-ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை வந்து சேரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி அந்த கப்பல், ஓமன் வளைகுடாவில் நின்று கொண்டிருந்தது. இக்கப்பலில் உள்ள எரிவாயு மூலம் நாட்டில் அரைநாள் எரிவாயு தேவையை பூா்த்தி செய்ய முடியும்.

ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போா் தொடங்கிய பிறகு, ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து வந்த முதல் இந்திய எரிவாயு கப்பல் ‘சா்வ சக்தி’ ஆகும். இந்த கப்பல் தவிர, ஹோா்முஸ் நீரிணையை கடக்க முடியாமல் கடற்பகுதியில் இந்தியாவுக்கு சொந்தமான 14 சரக்குக் கப்பல்கள் நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கின்றன என்று மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுடனான போரின் காரணமாக, கச்சா எண்ணெய், எரிவாயு கப்பல்கள் அதிகம் செல்லும் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. இதற்கு பதிலடியாக, ஈரான் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை கப்பல்கள் கடந்த சில நாள்களாக முற்றுகையிட்டுள்ளன. இதனால் ஹோா்முஸ் நீரிணை வழியே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.