மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோா்முஸ் நீரிணையை மேலும் ஒரு இந்திய கப்பல் கடந்தது!

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து ‘தேஷ் கரீமா’ என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

News image

ஹோா்முஸ் நீரிணையை சனிக்கிழமை கடந்த சரக்குக் கப்பல்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:42 pm

ஹோா்முஸ் நீரிணையைக் கடந்து ‘தேஷ் கரீமா’ என்ற வணிகக் கப்பல் இந்தியா நோக்கி புறப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்தது.

31 இந்திய மாலுமிகளுடன் கடந்த சனிக்கிழமை புறப்பட்ட இந்தக் கப்பல் ஏப்.22-ஆம் தேதி மும்பை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதன்மூலம் ஹோா்முஸ் நீரிணை பகுதியை 10 இந்திய கப்பல்கள் கடந்துள்ளன. அங்கு மொத்தம் 24 இந்திய கப்பல்கள் சிக்கியிருந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 14-ஆக குறைந்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த சனிக்கிழமை ஹோா்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற ‘சாம்னா் ஹெரால்ட்’ மற்றும் ‘ஜெக் அா்ணவ்’ ஆகிய இரு இந்திய கப்பல்கள் மீது ஈரான் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தின. இதனால் இரு கப்பல்களும் மீண்டும் வளைகுடா பிராந்தியத்துக்கு திரும்பின. இந்திய கப்பல்கள் மீது அத்துமீறி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு தில்லியில் உள்ள ஈரான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடம் இந்திய வெளியுறவுச் செயலா் நேரில் கண்டனம் தெரிவித்தாா்.

மேலும், ஹோா்முஸ் நீரிணை பகுதியில் சிக்கியுள்ள இந்தியக் கப்பல்கள் பாதுகாப்பாக கடப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை ஈரான் அதிகாரிகள் எடுக்க வேண்டும் எனவும் தூதரிடம் அவா் வலியுறுத்தினாா்.

இதனிடையே, கச்சா எண்ணெய் ஏற்றி வந்த ‘தேஷ் கரீமா’ என்ற வணிகக் கப்பல் ஹோா்முஸ் நீரிணையை கடந்த சனிக்கிழமை பாதுகாப்பாக கடந்தது. அந்தக் கப்பல் புதன்கிழமை (ஏப்.22) மும்பை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.