பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.

News image

ஆர்பிஐ வங்கி - ani

Updated On :2 மே 2026, 6:01 pm IST

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராக ரோகித் ஜெயினை மத்திய அரசு நியமித்துள்ளது.

சனிக்கிழமையுடன் நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்த ரபி சங்கருக்குப் பதிலாக ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித் ஜெயினின் நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர், மே 3 அல்லது அதன் பிறகு முறைப்படி பொறுப்பேற்று அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பதவி வகிப்பார். ரோகித் ஜெயின் தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் நிர்வாக இயக்குநராக உள்ளார். 1934-ஆம் ஆண்டின் ஆர்பிஐ சட்டத்தின்படி, மத்திய வங்கியில் நான்கு துணை ஆளுநர்கள் இருக்க வேண்டும்.

தற்போது ஆர்பிஐ-யின் மற்ற மூன்று துணை ஆளுநர்களாக சுவாமிநாதன் ஜே, பூனம் குப்தா மற்றும் எஸ். சி. முர்மு ஆகியோர் உள்ளனர். இன்றுடன் பதவிக்காலம் முடிந்த ரபி சங்கர் முதலில் 2021 செப்டம்பரில் மூன்று ஆண்டுகளுக்கு ஆர்பிஐ துணை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

பிறகு அவருக்கு 2024, 2025 ஆகிய ஆண்டுகளில் தலா ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

The government has appointed Rohit Jain as Deputy Governor of the Reserve Bank of India for a three-year term.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.