தமிழ்நாட்டின் ஆளுநராக கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர் இன்று(மார்ச் 12) பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஆளுநர் ஆர். என். ரவி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து கேரள ஆளுநர் ஆர். வி. ஆர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கவுள்ளார்.
இதற்கான பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. ஆர்லேகருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். ஏ. தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழக ஆளுநராக இருந்த ஆர். என். ரவி, மேற்குவங்க ஆளுநராக நியமிக்கப்பட்டதையடுத்து சென்னையிலிருந்து விமானத்தில் தில்லி வழியாக கொல்கத்தாவுக்கு புதன்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக தமிழகத்தின் முன்னாள் ஆளுநர் ஆர்.என்.ரவி வியாழக்கிழமை (மார்ச் 12) பதவியேற்றுக் கொண்டார்.
Summary
Kerala Governor Rajendra Arlekar took charge as the Governor of Tamil Nadu today (March 12).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகாலாந்தின் புதிய ஆளுநராக நந்த் கிஷோர் யாதவ் பதவியேற்பு!

தமிழக ஆளுநராக பொறுப்பேற்றார் கேரள ஆளுநர் ராஜேந்திர ஆர்லேகர்!

தெலங்கானா ஆளுநராக பிரதாப் சுக்லா பதவியேற்பு!

தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



