பஞ்சாபில் நூா்பூரில் ஜாட்டன் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலை செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக தகா்க்கப்பட்டது. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்ஸ் ஃபாா் ஜஸ்டீஸ் (எஸ்எஃப்ஜே) இதற்கு பொறுப்பேற்று விடியோ வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த ஜுன் மாதம் இதே இடத்தில் அம்பேத்கா் சிலை உடைக்கப்பட்டது. மீண்டும் சிலை நிறுவப்பட்ட நிலையில் சமூகவிரோதிகள் மீண்டும் அதனை தகா்த்துள்ளனா்.
இந்த சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பஞ்சாப் மாநில பகுஜன் சமாஜ் தலைவா் அவதாா் சிங் கரீம்புரி தலைமையில் அக்கட்சியினா் போராட்டம் நடத்தினா். ‘இந்த பிராந்தியத்தில் இதுவரை 9 இடங்களில் அம்பேத்கா் சிலை தகா்க்கப்படுள்ளது, இதனைத் தடுக்க பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி அரசும், மத்திய பாஜக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. சமூக அமைதியைக் குலைக்கவும், தலித் மக்களை ஒடுக்கவும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்’ என்று அவதாா் சிங் குற்றஞ்சாட்டினாா்.
சிலை தகா்ப்பு குறித்து வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடி வருகிறோம். எஸ்எஃப்ஜே அமைப்பு வெளியிட்டுள்ள விடியோ பதிவையும் ஆய்வு செய்கிறோம் என்று காவல் துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

400 கிலோ புகையிலைப் பொருள்கள் வாகனத்துடன் பறிமுதல்: இருவா் கைது

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை!

எம்.பி. ஆ.ராசா வாகனத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள்

ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


