மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளைகுடா போர்! 4.26 லட்சம் பேர் நாடு திரும்பினர் - மத்திய அரசு அறிவிப்பு!

வளைகுடா போரால் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியா வந்தடைந்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு...

News image

வளைகுடா போர்த் தொடங்கியது முதல் 4.26 லட்சம் பேர் நாடு திரும்பினர்... (கோப்புப் படம்) - ANI

Updated On :25 மார்ச் 2026, 1:57 pm

வளைகுடா போர்த் தொடங்கியது முதல் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால், பல்வேறு நாடுகளின் விமானப் போக்குவரத்து குறைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விமானப் போக்குவரத்தின் நிலைமை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், போர்த் தொடங்கியது முதல் இதுவரை 4.26 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாகவும், மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் ஆர் மஹாஜன் புதன்கிழமை (மார்ச் 25) அன்று தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“போர் காலத்தில், வளைகுடா நாடுகளிலிருந்து இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சொந்தமான 2,149 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களின் நலன் மற்றும் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளின் வழியாக ஈரானில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்புவதற்குத் தேவையான உதவிகளை நாங்கள் செய்து வருகிறோம். இதுவரை, 717 மாணவர்கள் உள்பட 1,043 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் ஜோர்டான் நாட்டின் வழியாக இந்தியா வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் ஆகிய நாடுகளில் நிலவும் விமானக் கட்டுப்பாடுகளால் சௌதி அரேபியா வழியாக இந்தியர்கள் பயணம் மேற்கொள்ள உதவிகள் செய்யப்பட்டுள்ளன” எனக் கூறியுள்ளார்.

இத்துடன், கடந்த மார்ச் 18 அன்று சௌதி அரேபியா மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் இன்று தாயகம் வந்தடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Ministry of External Affairs has announced that 4.26 lakh people have returned to India, West Asia crisis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.