மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியது குறித்து...

News image

அஸீம் மகாஜன் - ANI

Updated On :19 மார்ச் 2026, 12:26 pm

வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 முதல் நடைபெற்று வரும் நிலையில், போர் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளின் வான்வழிப் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், பல முக்கிய தலைவர்கள் உள்பட லட்சக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் உருவானது. இதனையடுத்து, அண்மைக் காலமாக குறைந்த அளவில் இயக்கப்படும் விமானங்கள் மூலம் இந்தியர்கள் தாயகம் வந்தடைந்து கொண்டு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வளைகுடாப் பிரிவு இணைச் செயலாளர் அஸீம் மகாஜன் வியாழக்கிழமை (மார்ச் 19) கூறுகையில்,

“பிப்ரவரி 28 முதல் 2.8 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், எம்டி சேஃப்சீ விஷ்ணு கப்பலில் உள்ள 15 இந்தியப் பணியாளர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அவர்களின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Summary

More than 2.8 lakh people from Gulf countries have arrived in India, said Aseem Mahajan, Joint Secretary, Gulf Division, Indian Ministry of External Affairs, on Thursday (March 19).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.