வளைகுடா போர் தொடங்கியது முதல் இதுவரை 8.15 லட்சம் பேர் இந்தியாவுக்குத் திரும்பி வந்துள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதனால், வளைகுடா நாடுகளிடையே மிகவும் பதற்றமான சூழல் நிலவி வந்தது.
இதையடுத்து, பல்வேறு நாடுகளும் தங்களின் வான்வழிப் பாதையை மூடியதால், விமானப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனிடையே, ஈரானில் சிக்கிய இந்தியர்கள் அஜர்பைஜான் மற்றும் ஆர்மீனியா வழியாகவும், இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் வழியாகத் தாயகம் திரும்பினர்.
இந்த நிலையில், வான்வழிப் பாதைகள் திறக்கப்பட்டுள்ள நாடுகளின் வழியாக இயக்கப்படும் விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு திரும்புவதாகவும், இதுவரை சுமார் 8,15,000 பேர் இந்தியா வந்துள்ளதாகவும் வியாழக்கிழமை (ஏப். 9) அன்று மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வரும் ஏப். 11 அன்று 2 நாள் அரசு முறைப் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்வதாகவும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கத்தார் நாட்டுக்குச் சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி கடந்த பிப். 28 அன்று கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
Ministry of External Affairs has announced that 8.15 lakh people have returned to India since the commencement of the Gulf War.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோல் இந்தியா பங்கு விற்பனை: முதல் நாளிலேயே ரூ.19,000 கோடிக்கு நிறுவன முதலீட்டாளா்கள் விண்ணப்பம்!

எபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்

எபோலா: கண்காணிப்பை தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்







