ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.
தில்லியில் அக்கட்சியின் தலைவரும் மத்திய இணையமைச்சருமான ஜெயந்த் சௌதரி முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. முன்னதாக, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாக கே.சி.தியாகி வியாழக்கிழமை அறிவித்தாா். எனினும் விலகுவதற்கான காரணம் எதையும் அவா் தெரிவிக்கவில்லை.
கடந்த 2003-ஆம் ஆண்டு சமதா கட்சி, ஜனதா தளம் இணைப்பில் இருந்தே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தியாகி பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தாா். கட்சியின் தலைமை பொதுச் செயலா், தலைமை செய்தித் தொடா்பாளா், அரசியல் ஆலோசகா் எனப் பல பதவிகளை அவா் வகித்துள்ளாா். 75 வயதாகும் தியாகி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா்.
தொடர்புடையது

நிதீஷ் குமாா் ராஜிநாமா - பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்பு

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

கேரளத்தில் இடதுசாரிகளுக்கு ஆதரவாக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்- காங்கிரஸ் அதிருப்தி

ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவராக நிதீஷ் குமார் மீண்டும் தேர்வு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

