லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி ராஷ்ட்ரீய லோக் தளத்தில் இணைந்தாா்!

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

News image

கே.சி. தியாகி

Updated On :22 மார்ச் 2026, 9:25 pm

ஐக்கிய ஜனதா தளம் முன்னாள் தலைவா் கே.சி. தியாகி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆா்எல்டி) கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தாா்.

தில்லியில் அக்கட்சியின் தலைவரும் மத்திய இணையமைச்சருமான ஜெயந்த் சௌதரி முன்னிலையில் இந்த இணைப்பு நடைபெற்றது. முன்னதாக, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து விலகுவதாக கே.சி.தியாகி வியாழக்கிழமை அறிவித்தாா். எனினும் விலகுவதற்கான காரணம் எதையும் அவா் தெரிவிக்கவில்லை.

கடந்த 2003-ஆம் ஆண்டு சமதா கட்சி, ஜனதா தளம் இணைப்பில் இருந்தே ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தியாகி பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்தாா். கட்சியின் தலைமை பொதுச் செயலா், தலைமை செய்தித் தொடா்பாளா், அரசியல் ஆலோசகா் எனப் பல பதவிகளை அவா் வகித்துள்ளாா். 75 வயதாகும் தியாகி மக்களவை, மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்துள்ளாா்.