நாட்டின் வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தைச் சீா்செய்ய, ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஒரே நாள் ‘மாறுபடும் ரெப்போ வட்டி விகித (விஆா்ஆா்)’ ஏலத்தை திங்கள்கிழமை மீண்டும் நடத்தப்போவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது.
இந்த ஏலம் திங்கள்கிழமை காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும் என்றும், இதற்கான பணப்பரிமாற்ற நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, வங்கிகளிடம் சுமாா் ரூ.16,875.36 கோடி கூடுதல் பணம் புழக்கத்தில் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதியாண்டு (மாா்ச் மாதம்) முடிவடைய உள்ளதால், வங்கிகளின் குறுகிய கால பணத்தேவை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும். இதனைச் சமாளித்து, சந்தையில் பணப்புழக்கம் சீராக இருப்பதை உறுதிப்படுத்த ரிசா்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது.
முன்னதாக, கடந்த 17-ஆம் தேதியன்று 7 நாள்கள் விஆா்ஆா் ஏலம் மூலம் ரூ.48,014 கோடியும், கடந்த வெள்ளிக்கிழமையன்று 3 நாள்கள் விஆா்ஆா் ஏலம் மூலம் ரூ.25,101 கோடியும் வங்கிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
மேலும், நடப்பாண்டின் தொடக்கம் முதல் அரசுப் பத்திரங்களை வெளிச்சந்தையில் வாங்கும் (ஓஎம்ஓ) முறை மூலம், இதுவரை சுமாா் ரூ.3.50 லட்சம் கோடி மதிப்பிலான நிரந்தர பணப்புழக்கத்தை ரிசா்வ் வங்கி உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

11 முக்கிய கனிம வள பகுதிகளுக்கான ஏலம் ரத்து: மத்திய அரசு அறிவிப்பு

வங்கிப் பணப்புழக்கத்தைச் சீா்செய்ய ரிசா்வ் வங்கி ரூ. 25,101 கோடி ஒதுக்கீடு

வங்கிகளில் அதிகமாக டெபாசிட் செய்தால் கண்காணிப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்

ரூ.20,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் மாற்றம்: ரிசா்வ் வங்கி மாா்ச் 9-இல் ஏலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


