வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்

உலகளாவிய போர் அச்சுறுத்தல்களுக்குப் பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு என குடியரசுத் துணைத்தலைவர் கூறியது குறித்து...

News image

குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 11:01 am

உலகளாவிய போர் அச்சுறுத்தல்களுக்கு தீர்வு காண்பதற்கான ஒரே வழி பேச்சுவார்த்தைதான் என குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய இளைஞர் நாடாளுமன்றத்தின் 29 வது தேசிய அமர்வின் கூட்டம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அரங்கில் நடைபெற்றது.

நான்கு நாள்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் கருப்பொருள் 'இந்திய மொழிகள் மற்றும் வளர்ந்த இந்தியா - 2047' என்பதாகும்.

அங்கு உரையாற்றிய அவர், “தாய்மொழியில் பேசுவது என்பது பிராந்தியத்தைக் குறிப்பதல்ல; மாறாகத் தனித்துவத்தைக் குறிப்பதாகும்.

உலகம் முழுவதும் போரின் அச்சுறுத்தலில் இருக்கும்போது, ​​பேச்சுவார்த்தை மட்டுமே தீர்வுகளுக்கு வழிவகுக்கும். ஆரோக்கியமான விவாதம், மாறுபட்ட கண்ணோட்டங்களைக் கேட்டறிதல் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளைக் கண்டறிதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு நமக்குக் கற்றுத் தருகிறது.

மொழிகள் குறித்த இந்தத் தலைப்பு காலத்தின் தேவையாகும். நாட்டில் எண்ணற்ற மொழிகள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் தாயை நேசிக்கிறார்கள். அதேபோல, ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழியை நேசிக்கிறார்கள்.

ஆனால் அதற்காக நாம் மற்றொருவரின் தாயை மதிக்கக் கூடாது என்று அர்த்தமல்ல. நாம் நமது தாய்மொழியில் பேசும்போது, ​வட்டார வழக்கில் பேசுவதில்லை. வட்டார வழக்கில் பேசுவதுதான் நமது தனித்துவம்” என்று வலியுறுத்தினார்.

Summary

Vice President C.P. Radhakrishnan has said that dialogue is the only way to find a solution amid global threats of war.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.