மகாவீர் சக்ரா விருது பெற்ற கார்கில் போர் நாயகனான ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்.
லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி கர்னல் சோனம் வாங்சுக், 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றார். மேலும், இலங்கையில் களமிறக்கப்பட்ட இந்திய அமைதிப்படையில் முக்கிய பங்குவகித்தார்.
கடந்த 1999 ஆம் ஆண்டு மேஜர் பதவி வகித்த சோனம் வாங்சுக் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரில், 5,500 அடி உயரத்தில் நடைபெற்ற சண்டையில் துணிச்சலுடன் செயல்பட்டதற்காக, அவருக்கு இந்திய அரசின் சார்பில் மகாவீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், லடாக்கில் உள்ள அவரது இல்லத்தில் 61 வயதான சோனம் வாங்சுக் வெள்ளிக்கிழமை (ஏப். 10) அன்று திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமானதாக அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கர்னல் வாங்சுக்கின் மறைவுக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கின் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சாக்ஸேனா மற்றும் இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Summary
Kargil War hero Colonel Sonam Wangchuk has passed away.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war

ஈரான் போர் எதிரொலியா? முட்டை விலை கடும் வீழ்ச்சி!

தேசியப் பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து: சோனம் வாங்சுக் சிறையில் இருந்து விடுதலை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



