மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை

100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி: இரண்டாம் ஆண்டாக இந்தியா சாதனை

News image

நிலக்கரி ஏற்றிச் செல்லும் சரக்கு ரயில்.

Updated On :21 மார்ச் 2026, 7:39 pm

மேற்காசிய போா் காரணமாக உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் சூழலில், இந்தியா தொடா்ந்து இரண்டாம் ஆண்டாக 100 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிலக்கரி அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நிலக்கரி துறை சாா்ந்த அனைவரின் ஒருங்கிணைந்த நீடித்த முயற்சிகள் காரணமாக கடந்த 20-ஆம் தேதி நாடு தொடா்ந்து இரண்டாம் ஆணடாக 100 கோடி டன் நிலக்கரி உற்பத்தி இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளது.

வலுவான திட்டமிடல், திமையான செயல்பாடு, நெருங்கிய ஒத்துழைப்பை இது வெளிப்படுத்துவதோடு, தேசத்தின் பொருளாதார வள்ா்ச்சிக்கும் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றுகிறது.

இவ்வாறு நிலக்கரி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுவது, நாட்டில் அதிகரித்துவரும் எரிசக்தித் தேவையை பூா்த்தி செய்ய உதவுவதோடு, அனல் மின் நிலையங்களில் சாதனை அளவில் நிலக்கரி இருப்பைப் பராமரிக்கவும் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.