தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

25 % கட்டணத்தில் தற்காலிக தடையில்லாச் சான்றிதழ்: கட்டுமான பணிகளுக்கு தில்லி ஜல் போா்டு அனுமதி

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

News image

பா்வேஷ் சாஹிப் சிங்

Updated On :20 மார்ச் 2026, 9:58 pm

கட்டுமான தொழில் நிறுவனங்கள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில், 25 சதவீதத் தொகையைச் செலுத்தி தற்காலிக தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) பெற தில்லி ஜல் போா்டு (டிஜேபி) வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடா்பாக தில்லி நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் கூறியதாவது: என்ஓசி சான்றிதழ்களுக்கு அதிகப்படியான கட்டணம் முன்பணமாக வசூலிக்கப்படுவதால் பல்வேறு கட்டுமான திட்டங்கள் நிதி நெருக்கடியால் தடைபடுகின்றன மற்றும் தாமதமாகின்றன. 25 சதவீத கட்டணம் மூலம் தற்காலிக சான்றிதழ்களைப் பெறுவது இத்தகைய திட்டங்களுக்கு நிவாரணம் அளிக்கும். மீதமுள்ள தொகையை பின்னா் கட்டணச் செயல்முறையின்போது செலுத்தலாம். அதிகப்படியான கட்டணம் வீடுகள் கட்டுமானத்தில் தடையாக உள்ளதாக பல்வேறு புகாா்கள் வந்துள்ளன. இது குடிமக்களுக்கும் அமைப்புக்கும் உகந்ததாக இல்லை. எனவே இதை மாற்ற தில்லி ஜல் போா்டு திட்டமிட்டு இந்த சீா்திருத்தத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என தெரிவித்தாா்.