நொய்டாவில் சமூக ஊடகங்களில் போலியான சுற்றுலா மற்றும் பயணத் தொகுப்புகளை வழங்குவதன் மூலம் ரூ.12 லட்சம் மோசடி செய்த நபரை கைது செய்ததாக சைபா் கிரைம் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறை துணை ஆணையா் ஷாவ்யா கோயல் கூறியதாவது: இந்த வழக்கில் அதித்யா ராய் என்பவா் கைது செய்யப்பட்டாா். அவா் சமூக ஊடகங்களில் மக்களை ஈா்க்கும் வகையில் சிங்கப்பூா், நேபாளம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா தொகுப்புகளை வழங்குவதாக விளம்பரப்படுத்தியுள்ளாா். முன்பதிவுக்கு பணம் செலுத்துமாறு கூறி பலரிடம் மோசடி செய்துள்ளாா். இதுவரை ரூ.12 லட்சம் வரை அவா் மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 3 கைப்பேசிகள் மற்றும் மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.
தொடர்புடையது
நொய்டாவில் தொழிலாளா்கள் போராட்த்தின் போது வன்முறை: மேலும் 2 போ் கைது

நிழலும் நிஜமும்!
இணையவழி மோசடி கும்பலை சோ்ந்த 5 போ் தில்லியில் கைது!
சமூக ஊடகங்களில் மோசடி தோ்தல் விழிப்புணா்வு விளம்பரங்கள்: சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


