மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

'சீட் இல்லை' திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா!

திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜிநாமா செய்துள்ளது பற்றி...

News image

ககேஸ்வர் ராய் - X

Updated On :18 மார்ச் 2026, 1:10 pm

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் எம்எல்ஏ ஒருவர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப். 23 மற்றும் ஏப். 29 ஆகிய தேதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதல்வருமான மமதா பானர்ஜி நேற்று வெளியிட்டார். அதில், மீதமுள்ள மூன்று தொகுதிகள் கூட்டணிக் கட்சியான அனித் தாபாவின் பாரதிய கூர்கா பிரஜாதாந்திரிக் மோர்ச்சாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பவானிபூர் தொகுதியில் மமதா பானர்ஜி மீண்டும் போட்டியிடவுள்ளார்.

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் தற்போது எம்எல்ஏவாக இருக்கும் 74 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இது கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜல்பைகுரி மாவட்டம் ராஜ்கன்ச் தொகுதி எம்எல்ஏ ககேஸ்வர் ராய் தனது எம்எல்ஏ பதவியை இன்று ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜ்கன்ச் தொகுதியில் புதியதாக இந்திய தடகள வீராங்கனை ஸ்வப்னா பர்மனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ராஜ்கன்ச் தொகுதியில் 3 முறை எம்எல்ஏவாக இருந்த ககேஸ்வர் ராய், வடக்கு மேற்குவங்கத்தில் கட்சியின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இந்நிலையில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததுடன் ஜல்பைகுரி மாவட்டத் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

மமதா பானர்ஜி திரிணமூல் காங்கிரஸ் கட்சியை தொடங்கியதில் இருந்து தான் அவருடன் பணிபுரிவதாகவும் ஆனால் இன்று பண அதிகாரத்தால் தான் தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

Summary

West Bengal elections: Upset TMC MLA resigns after athlete Swapna Barman gets ticket from Jalpaiguri

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.