இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தால் கடந்த 2013ஆம் ஆண்டு விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்ட இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் (நேவிக்) அமைப்பின் அணு கடிகாரம் செயலிழந்துப் போனதால், செயற்கைக் கோள்களின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியிருக்கிறது.
ஐஆர்என்எஸ்எஸ்-1எஃப் செயற்கைக் கோளின் அணு கடிகாரம் செயலிழந்துவிட்டதை, இஸ்ரோ கடந்த 13ஆம் தேதி அறிவித்திருந்தது.
நேவிக் செயற்கைக் கோளைக் கொண்டுதான், நாட்டில் உள்ள 8700 ரயில்கள் டிராக் செய்யும் பணி நடந்து வந்தது. இது 12 ஆயிரம் ரயில்களாக நீட்டிக்க இலக்கும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமல்லாமல், பேரிடர் முன்னெச்சரிக்கை, கடல் பரப்பு வழிசெலுத்துதல், வாகனங்கள் எங்கிருக்கின்றன என்பதை டிராக் செய்யும் பணிகள் நடந்து வந்துள்ளன. தற்போது வெறும் மூன்று செயற்கைக் கோள்கள் மட்டுமே உள்ளன, அவையும் அபாயத்தில் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செயற்கைக் கோளுடன் இணைக்கப்பட்டிருந்த அந்த அணு கடிகாரம், 10 ஆண்டுகளுக்கும் மேலான தன்னடைய இடைவிடாத செயல்பாட்டை நிறுத்தியிருக்கிறது. ஆனால், இது விஞ்ஞானிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பில் அடங்கிய நான்கு செயற்கைக் கோள்களில் ஒன்று முடங்கியதால், ராணுவ எல்லைகள், கடல் கண்காணிப்பு போன்ற பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், இதுபோன்ற தரவுகளைப் பெற இந்தியா மீண்டும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கலிலியோ செயற்கைக் கோள் தரவுகளை நாடும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மீண்டும் இந்த வாய்ப்பை இந்தியா பெற வேண்டும் என்றால், இஸ்ரோ இரண்டு புதிய செயற்கைக் கோள்களை ஏவும் நிலை ஏற்பட்டுள்ளது. ஐஆர்என்எஸ்எஸ் 1எஃப் செயற்கைக் கோள் ஏவப்பட்டதற்கு முழு முக்கிய காரணமே கார்கில் போர்தான்.
1999-ஆம் ஆண்டில், கார்கில் போரின்போது, இடத் தரவு உள்ளிட்ட விவரங்களை வழங்க அமெரிக்கா மறுத்து விட்டது. இந்த பின்னடைவு போரின்போது பாதுகாப்புப் படைக்கு மிகப்பெரிய சாவலாக இருந்தது. இதனால், இந்தியா தன்னுடைய தற்சார்பை உறுதி செய்ய நான்கு செயற்கைக் கோள்களைக் கொண்ட இந்திய மண்டல வழிகாட்டி செயற்கைகோள் அமைப்பை விண்வெளியில் நிலைநிறுத்தி செயல்படுத்தி வந்தது. தற்போது இந்தியாவின் உள்நாட்டு செயற்கைக்கோள் வழிசெலுத்துதல் அமைப்பில் இருந்த ஒரு செயற்கைக் கோளின் அணு கடிகாரம் செயலிழந்திருப்பதுதான் கவலையை ஏற்படுத்துகிறது.
இந்த செயற்கைக் கோள் அமைப்பின் மூலம், இயற்கைப் பேரிடர்கள், எல்லைப் பகுதிகளில் நடக்கும் ஊடுருவல், அண்டை நாடுகளில் பயங்கரவாத முகாம்கள் போன்றவற்றை இந்தியா கண்காணித்து உரிய நடவடிக்கைகள் எடுத்து வந்தன. ஆழ்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு இந்த செயற்கைக் கோள் உதவியுடன் செயல்படும் ஜிபிஎஸ் நேவிக் கருவிகளும் வழங்கப்பட்டு, அவர்களுக்கு இயற்கைப் பேரிடர்கள் குறித்து தகவல்கள் அளிக்கப்பட்டு வந்தன. இந்த செயற்கைக் கோள் அமைப்பின் மூலம் சாதாரண மனிதர்கள் பெற்ற வாய்ப்புகளும் ஏராளம்.
இந்தியா நேவிகேஷன் அமைப்பில், நான்கு செயற்கைக் கோள்களில் ஒன்று முடங்கியதால் மற்ற மூன்று செயற்கைக் கோள்களும் இயங்கும் என்றாலும், குறைந்தது 4 செயற்கைக் கோள்கள், சரியான நிலைகளில் நிலைநிறுத்தப்படுவது அவசியம் என்பதால், ஒரு செயற்கைக் கோள் செயலிழந்திருப்பது கவலைக்குரிய விஷயமாகவே கருதப்படுகிறது. செயற்கைக் கோள் அனுப்பும் தகவல்கள், நேரம், உயரம், தொலைவு என பல விவரங்களையும் ஒன்றிணைத்து வழங்கப்படும். எனவே, ஓரிடத்தின் துல்லியத்தன்மையை அறிய மூன்று செயற்கைக் கோள்கள் அனுப்பும் விவரங்கள் சரிபார்க்கப்படும். தற்போது இரண்டு செயற்கைக் கோள்களின் தரவுகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் சவாலாக மாறியுள்ளது என்று கூறப்படுகிறது.
Summary
About the atomic clock of the Navi satellite that malfunctioned in space..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழுதான ’லிப்ட்’ இல் சிக்கியதால் கீழே குதித்த மேலாளா் உயிரிழப்பு

சரக்கு வேன் மோதியதில் ரயில்வே கேட் பழுது

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

26.2.1976: செயற்கைக் கோள் தொடர்பு நிலையம் சென்னையில் ஏற்படும்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



