இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தெற்காசியாவில் நிலவி வரும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில் அமெரிக்க செனட் சபையில் அந்நாட்டு உளவுத் துறை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல், அச்சுறுத்தல் குறித்தும் 34 பக்க ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க உளவுத் துறை அறிக்கையின்படி, "கடந்த காலங்களில் இந்த இரு (இந்தியா - பாகிஸ்தான்) நாடுகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டதால், பதற்றம் அதிகரித்து, அணு ஆயுத மோதல் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும், இரு நாடுகளுக்கிடையேயான பகைமையை எடுத்துக்காட்டும் உதாரணம்.
இந்தப் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால், இரு நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத மோதல் பதற்றம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தன.
இருப்பினும், பயங்கரவாத அமைப்பினரால் புதிய நெருக்கடிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இரு நாடுகளும் வெளிப்படையான போரைத் தீவிரமாக முன்னெடுக்காத நிலையிலும், கடந்த காலத்தின் பகைமைகள், பயங்கரவாதம், வளர்ந்து வரும் ராணுவத் திறன்கள் ஆகியவை நெருக்கடிகளைத் தூண்டுவதாய் உள்ளன.
பாகிஸ்தான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிக தொலைவு செல்லக்கூடிய மற்றும் அதிநவீன அமைப்புகளையும் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.
தெற்காசியாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் அளவுக்கு திறன்கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் போக்கு தொடர்ந்தால், அமெரிக்காவை தாக்கக்கூடிய அளவுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தலும் ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.
Summary
India - Pakistan ties remain a risk for nuclear conflict: US Intelligence alert
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்ததா?

ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்

வெள்ளை மாளிகை அருகே பூங்காவில் துப்பாக்கிச்சூடு?அமெரிக்க உளவுத் துறை விசாரணை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



