மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை

News image

இந்தியா - பாகிஸ்தான் - கோப்புப்படம்

Updated On :19 மார்ச் 2026, 2:54 am

இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம் இருப்பதாக அமெரிக்க உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்காசியாவில் நிலவி வரும் அச்சுறுத்தல் குறித்த அறிக்கையில் அமெரிக்க செனட் சபையில் அந்நாட்டு உளவுத் துறை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல், அச்சுறுத்தல் குறித்தும் 34 பக்க ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.

அமெரிக்க உளவுத் துறை அறிக்கையின்படி, "கடந்த காலங்களில் இந்த இரு (இந்தியா - பாகிஸ்தான்) நாடுகளும் நேருக்குநேர் மோதிக் கொண்டதால், பதற்றம் அதிகரித்து, அணு ஆயுத மோதல் உருவாகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும், இரு நாடுகளுக்கிடையேயான பகைமையை எடுத்துக்காட்டும் உதாரணம்.

இந்தப் போரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தலையீட்டால், இரு நாடுகளுக்கிடையேயான அணு ஆயுத மோதல் பதற்றம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டு வந்தன.

இருப்பினும், பயங்கரவாத அமைப்பினரால் புதிய நெருக்கடிகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இரு நாடுகளும் வெளிப்படையான போரைத் தீவிரமாக முன்னெடுக்காத நிலையிலும், கடந்த காலத்தின் பகைமைகள், பயங்கரவாதம், வளர்ந்து வரும் ராணுவத் திறன்கள் ஆகியவை நெருக்கடிகளைத் தூண்டுவதாய் உள்ளன.

பாகிஸ்தான் தனது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அதிக தொலைவு செல்லக்கூடிய மற்றும் அதிநவீன அமைப்புகளையும் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது.

தெற்காசியாவுக்கு அப்பால் உள்ள இலக்குகளைத் தாக்கும் அளவுக்கு திறன்கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் போக்கு தொடர்ந்தால், அமெரிக்காவை தாக்கக்கூடிய அளவுக்கு கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அச்சுறுத்தலும் ஏற்படும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

Summary

India - Pakistan ties remain a risk for nuclear conflict: US Intelligence alert

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.