ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே குப்பைகளை எரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சமீபகாலமாக ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் மற்றும் காய்ந்த செடி கொடிகளை எரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அத்தகைய செயல்கள் ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகளுக்கு அச்சுறுத்தல்களாக உள்ளன.
குப்பைகளை எரிக்கும் போது எழும் வெப்பமும், புகையும் ரயில்களுக்கு மின்சாரம் வழங்கும் உயா் அழுத்த மின்கம்பிகளையும், நுட்பமான சிக்னல் அமைப்புகளையும் பாதிக்கும். இதனால், ரயில் சேவைகளும் பாதிக்கக் கூடும். ரயில் பயணிகளின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படும்.
எனவே பொதுமக்கள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே காய்ந்த இலைகள், நெகிழி கழிவுகள் உள்ளிட்ட எளிதில் தீப்பற்றக்கூடிய குப்பையை குவிக்கவேண்டாம். அவற்றை எரிக்கவும் வேண்டாம். அத்தகைய செயல்பாடானது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

விழுப்புரம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் 89 சதவீதம் நிறைவு: தெற்கு ரயில்வே பொது மேலாளா்

வருவாய், தத்கல் பதிவில் தெற்கு ரயில்வே முதலிடம்

ரயில் நிலைய குப்பை கிடங்கில் தீ விபத்து
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


