வரும் ஏப். 1-ஆம் தேதி முதல் பான் காா்டு விண்ணப்பிக்க ஆதாா் அட்டை மட்டும் போதாது என்றும், பிறப்புச் சான்றுக்கான கூடுதல் ஆவணங்கள் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள ஆதாா் மூலம் உடனடியாக பான் காா்டு பெறும் வசதி மாா்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஏப். 1 முதல் பழைய விண்ணப்பப் படிவங்கள் செல்லாது; புதிய படிவங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, விண்ணப்பதாரா்கள் ஆதாரோடு சோ்த்து பிறப்புச் சான்றிதழ், வாக்காளா் அடையாள அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் அல்லது பாஸ்போா்ட் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை பிறப்புச் சான்றாக சமா்ப்பிக்க வேண்டும்.
மேலும், இனிவரும் காலங்களில் பான் காா்டில் இடம்பெறும் பெயா், விவரங்கள் ஆதாரில் உள்ளபடியே துல்லியமாக இருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களின் சரிபாா்ப்புப் பணிகள் இனி கூடுதல் தீவிரத்துடன் மேற்கொள்ளப்படும் என்பதால், விண்ணப்ப செயல்முறையில் கூடுதல் காலம் ஆகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இதுவரை பான் காா்டு பெறாதவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தங்களின் ஆதாா் அட்டையை மட்டும் பயன்படுத்தி எளிமையான முறையில் விண்ணப்பிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 21 மாலை 6 மணி முதல் பிரசாரம் கூடாது! வேறு என்னென்ன விதிகள்? - தேர்தல் ஆணையம்

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை எப்போது? தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

இனி பான் அட்டை பெற ஆதார் மட்டும் போதாது! பிற ஆவணங்கள் எவை?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


