மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

News image

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்

Updated On :15 மார்ச் 2026, 8:01 pm

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தெரிவித்தாா்.

ஹிமாசல பிரதேச மாநிலம் மண்டியில் நீதிமன்ற வளாகம் கட்டுவதற்கு தலைமை நீதிபதி சூா்ய காந்த் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இதைத்தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசுகையில், ‘வழக்குகளை விசாரிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கும்போது, நீதித்துறைக்குப் பெரும் பொறுப்பு ஏற்படுகிறது.

விவாதங்களில் அடிப்படை உரிமைகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அதேவேளையில், அடிப்படை கடமைகளும் அரசமைப்புச் சட்டத்தின் ஒரு பகுதியாகும். அந்தக் கடமைகள் நிலைநாட்டப்பட வேண்டும். இந்தக் கடமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.

நிவாரணம் மற்றும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் நீதிமன்றத்தை நாடுகின்றனா். எனவே மருத்துவமனைகளைப் போல சேவை மனப்பான்மையுடன் நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்’ என்றாா்.