மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குஜராத் துறைமுகம் வரும் 22 கப்பல்கள்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

குஜராத் துறைமுகத்துக்கு 22 சரக்கு கப்பல்கள் வரவுள்ளது பற்றி...

News image

கோப்புப்படம் - Photo: Deendayal Port

Updated On :13 மார்ச் 2026, 4:59 am

அடுத்த 72 மணிநேரத்தில் 22 சரக்கு கப்பல்களை கையாள தயாராக இருப்பதாக குஜராத் துறைமுகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், குஜராத் மாநிலம், கண்ட்லாவில் உள்ள தீனதயாள் துறைமுக ஆணையம் வெளியிட்டிருக்கும் பதிவில், ”22 கப்பல்களை கையாளும் வகையில் பயணத் திட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டு, சிறந்த தரத்தில் சேவைகளை வழங்க துறைமுக பணியாளர்கள் திறமையாகச் செயல்பட்டு வருகின்றனர்” என்று பதிவிடப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்புகள், நிறுத்துமிடங்கள், சரக்கு கையாளுதல் குழுக்கள், கப்பல் வழித்தடங்கள் கண்காணிப்பு என ஒருங்கிணைப்புக் குழு நிறுவப்பட்டு அவசரகால அடிப்படையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனை நேற்றிரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், எரிபொருள் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கவும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில், தீனதயாள் துறைமுக ஆணையம் 22 கப்பல்கள் வருகை தரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Story image

ஈரான் போர்த் தொடங்கிய பிறகு முதல்முறையாக செளதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் மும்பை துறைமுகத்துக்கு முதல் சரக்கு கப்பல் புதன்கிழமை வருகைதந்தது. லைபீரியா கொடியுடன் கூடிய இந்த சரக்கு கப்பல் ஷென்லாங் சூயஸ்மாக்ஸை இந்திய கேப்டன் இயக்கியுள்ளார். இந்த கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது டிராக்கிங் தொழில்நுட்பத்தை அணைத்து பயணம் செய்துள்ளது.

முன்னதாக, தீனதயாள் துறைமுகம் நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிவந்த தாய்லாந்து கப்பல் மயூரி நரீ, ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க முயன்றபோது செவ்வாய்க்கிழமை ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், இரண்டு இந்திய மலுமிகள் கொல்லப்பட்டனர்.

மாணவர்கள், கப்பல் மலுமிகள், தொழில் வல்லுநர்கள், வணிகர்கள் உள்பட சுமார் 9,000 இந்தியர்கள் தற்போது ஈரானில் இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Summary

22 ships arriving at Gujarat port! Official announcement!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.