மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியாவின் விவகாரங்களில் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது: காங்கிரஸ்

இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட மத்திய அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

News image

பிரதமர் மோடி | அமெரிக்க அதிபர் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :12 மார்ச் 2026, 11:08 am

இந்தியாவின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிட மத்திய அரசு அனுமதிப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மாநிலங்களவையில் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் பணிகள் குறித்த விவாதத்தின்போது, காங்கிரஸ் எம்.பி. சக்திசின் கோஹில் பேசுகையில், "அமெரிக்காவின் அழுத்தத்துக்கு மத்திய அரசு அடிபணிந்து வருகிறது. எண்ணெய் வாங்குவது உள்ளிட்ட நாட்டின் விவகாரங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட அரசு அனுமதிக்கிறது.

அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகளின் நலன்கள் கேள்விக்குறியாகியுள்ளன.

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வருகிறார். டிரம்ப் கூறுவது பொய் என்று அவையில் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், உங்களால் அதைச் செய்ய முடியாது.

எங்கிருந்து எண்ணெய் வாங்குவது - ரஷியாவிடமிருந்தோ அல்லது வேறு எங்கிருந்தோ. அது நம் விருப்பம்; நம் நாடுதான் தீர்மானிக்கும்.

மேற்கு ஆசியாவில் போர் காரணமாக, இந்தியர்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ளவர்கள்தான் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, பிரதமர் மோடி ஆட்சியமைந்த பிறகுதான் இந்தியா மீதான மரியாதை உலகளவில் உயர்ந்துள்ளதாக பாஜக உறுப்பினர் சங்கீதா பல்வந்த் கூறினார்.

சங்கீதா பல்வந்த் கருத்துக்கு பதிலளிக்கையில், "உலகளவில் இந்தியாவின் மரியாதை எப்படி உயர்ந்துள்ளது?அப்படியென்றால், அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்குகளால் கட்டப்பட்டு நாடுகடத்தப்பட்டிருக்க மாட்டார்கள்.

என் நாடு என்ன செய்ய வேண்டும் என்பதை என் நாட்டு மக்களும் எனது அரசும்தான் தீர்மானிக்கும் என்று முன்னாள் பிரதமர் (இந்திரா காந்தி) சொன்னார். அப்போதுதான், இந்தியாவின் மரியாதை உலகளவில் உயர்ந்தது" என்று கோஹில் கூறினார்.

Summary

Govt letting US interfere in India's affairs: Congress MP Shaktisinh Gohil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.