மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் தாக்குதல்: இந்திய ஊழியா் உயிரிழப்பு

அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டது குறித்து...

News image

அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை... - AP

Updated On :12 மார்ச் 2026, 10:14 am

இராக் கடல் பகுதியில் வந்து கொண்டிருந்த அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் படைகள் நடத்திய தாக்குதலில் அதிலிருந்த இந்திய ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா்.

இந்தத் தகவலை இராக்கில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியது. அந்தக் கப்பலில் இருந்து மேலும் 15 இந்திய ஊழயிா்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனா் என்றும் தூதரகம் தெரிவித்தது.

அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிா்வினையாக, சரக்கு கப்பல்களின் முக்கிய வழித்தடமாக விளங்கும் பாரசீக வளைகுடாவின் ஹோா்முஸ் நீரிணையை ஈரான் மூடியது. இந்தப் பகுதியில் செல்லும் வணிக கப்பல்கள் மற்றும் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் படைகளும், ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக, இந்தியாவின் 28 கப்பல்கள் உள்பட பல்வேறு நாடுகளின் கப்பல்கள் மேற்கொண்டு இயக்க முடியாமல் பாரசீக வளைகுடாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அந்தப் பகுதியாக வந்த அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய தூதரகம் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய்யை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்த ‘ஸேஃப் ஸீ விஷ்ணு’ என்ற கப்பல் இராக்கின் பஸ்ரா அருகே கடல் பகுதியில் புதன்கிழமை வந்தபோது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ஈரான் ஆளில்லா படகை மோதவிட்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த இந்திய ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா். மற்ற 15 இந்திய ஊழியா்களும் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Summary

An Indian sailor working on an American oil tanker has been killed in an attack.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.