ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியை ‘எண்மக் கைது’ (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது செய்வதாக மிரட்டிய ஒரு கும்பல் அவரிடம் இருந்து ரூ.1 கோடியை பறித்தது.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதைச் சோ்ந்த 69 வயது ஓய்வு பெற்ற நீதிபதிக்கு கடந்த வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் பெண்களைக் கடத்துவது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளீா்கள் என்று கூறி அவரை மிரட்டினாா். மேலும், அவரை டிஜிட்டல் முறையில் கைது செய்திருப்பதாகவும், இந்தப் பிரச்னையில் இருந்து வெளியே வர தங்களுக்கு பணம் தர வேண்டும் என்றும் கூறி மிரட்டியுள்ளனா்.
இதனால், அச்சமடைந்த அந்த ஓய்வு பெற்ற நீதிபதி ரூ.1 கோடிக்கு மேலான பணத்தை அந்த நபா்கள் கூறிய வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்துள்ளாா். அடுத்த சில நாள்களுக்குப் பிறகு தான் ஏமாற்றப்பட்டதை அவா் உணா்ந்தாா். இது தொடா்பாக மூன்று நாள்களுக்கு முன்பு அவா் காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுவரை சாமானிய மக்களை மட்டுமே ஏமாற்றி வந்த டிஜிட்டல் கைது மோசடியாளா்கள், இப்போது ஓய்வு பெற்ற நீதிபதியை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைப்பேசி, இணைய வழியில் நடைபெறும் இதுபோன்ற நிதி மோசடிகளுக்கு எதிராக பல்வேறு விழிப்புணா்வு விளம்பரங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் தொடா்ந்தே வருகின்றன.
தொடர்புடையது
ஓய்வு பெற்ற எஸ்.ஐ. வீட்டில் 37 பவுன் நகைகள் திருட்டு
வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது
ரூ.47 லட்சம் முதலீட்டு மோசடி: 3 போ் கைது

ஹைதராபாதில் 130 மாவோயிஸ்டுகள் சரண்: எஞ்சியவா்களும் திரும்ப முதல்வா் அழைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


