மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசு

2025 - 26 ஆம் ஆண்டில் வேளாண் துறை உற்பத்தி மதிப்பீடு குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக...

News image

கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 2:39 pm

2025 - 26 ஆம் ஆண்டில் நாட்டின் கோதுமை உற்பத்தி 2 சதவீதம் அதிகரித்து 120.21 மில்லியன் டன்னாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டில் கோதுமை உற்பத்தி 117.94 டன்னாக இருந்தது.

ராபி பயிர்களில் முக்கியமானதாக உள்ள கோதுமையின் அறுவடை, கோடை காலத்தையொட்டி தொடங்கியுள்ளது. கோதுமை அதிகம் விளையும் மாநிலங்களில் அறுவடை தொடங்கி படிப்படியாக அதிகரித்து வருகிறது.

மத்திய வேளாண் துறை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2025 - 26 ஆண்டில் ராபி பயிர்களின் மொத்த உற்பத்தி 3.16 சதவீதம் அதிகரித்து 174.51 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 169.16 மில்லியன் டன்னாக இருந்தது.

2025 - 26 ஆம் ஆண்டில், பருப்பு வகைகளின் உற்பத்தி 7 சதவீதம் அதிகரித்து 16.24 மில்லியன் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 15.23 மில்லியன் டன்னாக இருந்தது. இறக்குமதியை சார்ந்து இருப்பதை குறைக்கும் வகையில் நாட்டின் தேவைக்கு ஏற்ப உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 11.11 டன்னாக இருந்த பட்டாணி உற்பத்தி, இந்த ஆண்டில் சற்று அதிகரித்து 11.79 மில்லியன் டன்னாக இருக்கும் எனவும் தானியங்கள் உற்பத்தி 1.65 மில்லியன் டன்னில் இருந்து 1.73 மில்லியன் டன்னாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோன்று சோளத்தின் உற்பத்தி 14.75 டன்னில் இருந்து இந்த ஆண்டு 15.90 டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு 5,53,000 டன்னாக இருந்த உளுந்து உற்பத்தி இந்த ஆண்டு 5,08,000 டன்னாக குறையும் என்றும், பாசிப்பயிறு உற்பத்தி 100,000 டன்னில் இருந்து 87,000 டன்னாக குறையும் எனவும் வேளாண் துறை மதிப்பீடு செய்துள்ளது.

Summary

India's wheat output pegged at record 120.21 mln tonnes in 2025-26, up 2 pc: Ministry

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.