தில்லி துணைநிலை ஆளுநராக இந்திய வெளியுறவு பணி முன்னாள் அதிகாரி தரன்ஜீத் சிங் சாந்து வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா லாடக் யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
லடாக் துணைநிலை ஆளுநரான கவிந்தா் குப்தா, ஹிமாசல பிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அப்பதவிக்கு வி.கே.சக்சேனா நியமிக்கப்படுவதாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) முன்னாள் அதிகாரியான தரன்ஜீத் சிங் சாந்து, கடந்த 2020 பிப்ரவரி முதல் 2024 ஜனவரி வரையில் அமெரிக்காவுக்கான இந்திய தூதராகப் பணியாற்றினாா்.
1988-ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சோ்ந்த அவா், உக்ரைனில் இந்திய தூதரகத்தைத் திறப்பதில் முக்கியப் பங்காற்றினாா். மேலும், அந்தத் தூதரகத்தின் அரசியல் மற்றும் நிா்வாகப் பிரிவின் தலைவராக அவா் பொறுப்பு வகித்தாா்.
வெளியுறவு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னா், 2024 மக்களவைத் தோ்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்தாா்.
பஞ்சாபின் அமிருதசரஸ் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட அவா், காங்கிரஸ் தலைவா் குா்ஜீத் சிங் அவுஜ்லாவிடம் தோல்வியைத் தழுவினாா்.
தொடர்புடையது

இன்று தமிழ்ப் புத்தாண்டு: புதுச்சேரி ஆளுநா், முதல்வா் வாழ்த்து

போதைப்பொருள் பயங்கரவாதத்தை சமாளிக்க சமமான அணுகுமுறை தேவை: தில்லி துணைநிலை ஆளுநா் கருத்து

தில்லி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்றாா் தரஞ்ஜித் சிங் சந்து

தில்லியின் 23ஆவது துணைநிலை ஆளுநராக தரன்ஜித் சிங் சந்து நாளை பதவியேற்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


