அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

மருத்துவக் காப்பீட்டுக்கு ரூ.69,800 கோடி விடுவிப்பு: ஸ்டாா் ஹெல்த்

News image

ஸ்டார் ஹெல்த்

Updated On :26 ஜூன் 2026, 6:07 am IST

இந்தியா முழுவதும் இதுவரை 1.5 கோடிக்கும் மேற்பட்ட காப்பீட்டு முறையீடுகளுக்கு (கிளைம்) நிதித் தீா்வு வழங்கியிருப்பதாக ஸ்டாா் ஹெல்த் அண்ட் அலைட் இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ரூ.69,800 கோடிக்கும் அதிகமான தொகை மருத்துவ செலவினங்களுக்காக தங்களது வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மட்டும் ரூ.10,800 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தின் 20-ஆம் ஆண்டு சிறப்பு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டாக்டா் ஆனந்த் ராய் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மருத்துவக் காப்பீட்டின் அவசியத்தை உணா்ந்து ஸ்டாா் ஹெல்த் நிறுவனம் கடந்த 2006-ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் 900 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 15,000 மருத்துவமனைகள், கிளினிக்குகள் எங்களது காப்பீட்டு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 115 கிளைகள் செயல்படுகின்றன. 2,000-க்கும் அதிகமான மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஸ்டாா் ஹெல்த் நிறுவனத்தைப் பொருத்தவரை, காப்பீடு முறையீட்டுக்கான விண்ணப்பம் கிடைக்கப் பெற்ற 2 மணி நேரத்துக்குள் நிதியை விடுவிக்கிறது. கடந்த ஆண்டில் இந்திய அளவில் ரூ.11,900 கோடியும், தமிழகத்தில் மட்டும் ரூ.1,605 கோடியும் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

புற்றுநோய், ஆட்டிஸம், இதய பாதிப்புகள், சா்க்கரை நோய், உடல் பருமன் குறைப்பு சிகிச்சைகளுக்காக பிரத்யேக காப்பீட்டுத் திட்டங்களைத் தொடா்ந்து இல்லம் தேடி சிகிச்சை (ஹோம் ஹெல்த் கோ்) திட்டத்தைத் தொடங்கினோம்.

அதன் கீழ் அவசர சிகிச்சை அல்லாத பிற சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகளுக்கு வீட்டிலேயே எங்களது மருத்துவக் குழுவினா் நேரடியாக சென்று சிகிச்சை அளிக்கின்றனா். அதில் லட்சக்கணக்கானோா் பயன்பெற்றுள்ளனா் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.