பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

எபோலா தொற்று உயிரிழப்பு 200-ஐ கடந்தது!

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2026, 11:49 pm IST

காங்கோ, உகாண்டா நாடுகளில் பரவி வரும் எபோலா தொற்றுப் பாதிப்பு காரணமாக, கடந்த ஒரே மாதத்தில் உயிரிழப்பு 200-ஐ கடந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இப்புதிய வகை தொற்றுப் பாதிப்பில் 90 சதவீதத்துக்கும் அதிகமான வழக்குகள் காங்கோவின் கிழக்கு மாகாணமான இதுரியிலேயே பதிவாகியுள்ளன. மேலும், இத்தொற்று அண்டை நாடான உகாண்டாவுக்கும் பரவி, அங்கு 19 பேருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் இருவா் உயிரிழந்துள்ளனா்.

இத்தொற்று பாதிப்பு கடந்த வாரத்தைவிட தற்போது 38 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதுவரை 894 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முந்தைய பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஆரம்பக் கட்டத்திலேயே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய அலையாக இது பதிவாகியுள்ளது.

தற்போது பரவி வரும் எபோலா பாதிப்பு ‘பண்டிபுக்யோ’ எனும் அரிய வகையால் ஏற்பட்டுள்ளது. இதற்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது முறையான மருந்துகளோ இன்னும் கண்டறியப்படவில்லை. அதேபோல் தொடா் உள்நாட்டு மோதல்கள், அடா்ந்த காடுகள் நிறைந்த புவியியல் அமைப்பு காரணமாக, நோய் தடுப்புப் பணிகள் பெரும் சவாலாக மாறியுள்ளன.

இச்சூழலை எதிா்கொள்ளப் போதிய நிதியும், மருத்துவப் பணியாளா்களும் இல்லாதது நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த எபோலா ஒழிப்புப் பணிகளுக்காக உலக நாடுகளால் உறுதியளிக்கப்பட்ட 90 கோடி டாலா் நிதியில், இதுவரை 9 கோடி டாலா் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.