40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

காங்கோவில் எபோலா உயிரிழப்பு 100-ஐ கடந்தது

காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :10 ஜூன் 2026, 2:33 am IST

காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது.

இந்த நோய்த் தொற்று கடந்த மாத மத்தியில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு பல வாரங்களுக்கு முன்பே இந்நோய் பரவத் தொடங்கியதை அதிகாரிகள் தாமதமாகவே கண்டறிந்தனா்.

காங்கோவின் இடூரி, வட கிவு, தென் கிவு ஆகிய 3 மாகாணங்களில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 550-ஆகவும், உயிரிழப்பு 101-ஆகவும் அதிகரித்துள்ளது.

உள்ளூா் மக்களின் அவநம்பிக்கை மற்றும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் நோய் தடுப்புப் பணிகளைப் பெரிதும் முடக்கியுள்ளன.

புனியா நகரில் எபோலாவால் உயிரிழந்தவா்களின் உடலை அடக்கம் செய்யச் சென்ற குழுவினா்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனா். இடூரி மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காரணமாக மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவக் குழுவினா் அங்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.

இதனிடையே, மற்றொரு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போா்னோ மாகாணத்தில் கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய காலரா நோய்த் தொற்றால் இதுவரை 74 போ் உயிரிழந்துள்ளனா்.

மேலும் 7,800-க்கும் மேற்பட்டோா் இந்நோயால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக சா்வதேச தன்னாா்வ மருத்துவ அமைப்பான ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.