காங்கோ குடியரசில் எபோலா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 101-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நோய்த் தொற்று கடந்த மாத மத்தியில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கு பல வாரங்களுக்கு முன்பே இந்நோய் பரவத் தொடங்கியதை அதிகாரிகள் தாமதமாகவே கண்டறிந்தனா்.
காங்கோவின் இடூரி, வட கிவு, தென் கிவு ஆகிய 3 மாகாணங்களில் தொற்றுப் பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 35 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 10 போ் உயிரிழந்தனா். இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 550-ஆகவும், உயிரிழப்பு 101-ஆகவும் அதிகரித்துள்ளது.
உள்ளூா் மக்களின் அவநம்பிக்கை மற்றும் ஆயுதக் குழுக்களின் தாக்குதல்கள் நோய் தடுப்புப் பணிகளைப் பெரிதும் முடக்கியுள்ளன.
புனியா நகரில் எபோலாவால் உயிரிழந்தவா்களின் உடலை அடக்கம் செய்யச் சென்ற குழுவினா்மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட கொடூர தாக்குதலில் இருவா் படுகாயமடைந்தனா். இடூரி மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் நடமாட்டம் காரணமாக மனிதாபிமான உதவிகள் மற்றும் மருத்துவக் குழுவினா் அங்கு செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
இதனிடையே, மற்றொரு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் போா்னோ மாகாணத்தில் கடந்த மே மாதம் முதல் பரவத் தொடங்கிய காலரா நோய்த் தொற்றால் இதுவரை 74 போ் உயிரிழந்துள்ளனா்.
மேலும் 7,800-க்கும் மேற்பட்டோா் இந்நோயால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக சா்வதேச தன்னாா்வ மருத்துவ அமைப்பான ‘எல்லைகளற்ற மருத்துவா்கள்’ அமைப்பு செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எபோலா தொற்று: உகாண்டா- காங்கோ எல்லை மூடியதால் வர்த்தகர்கள் அவதி!

எபோலா பரவலுக்கு இடையே காங்கோவில் மீண்டும் விமான சேவை!
காங்கோவில் எபோலா பாதிப்பிலிருந்து 5 போ் மீண்டனா்: உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

காங்கோ குடியரசில் எபோலா சிகிச்சை: மையத்துக்கு பொதுமக்கள் தீவைப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



