கேரளத்தில் கண்ணூர் மாவட்டத்தில் உம்ரா பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வயநாடு மாவட்டத்திலிருந்து கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு உம்ரா பயணத்தைத் தொடங்கச் சென்ற பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து திங்கள்கிழமை இரவு புறப்பட்டது. அதிகாலை சுமார் 2 மணியளவில் சிவபுரம் முஸ்லிம் லீக் அலுவலகத்திற்கு அருகே தீப்பிடித்தது.
பேருந்திலிருந்து புகை வருவதைக் கவனித்த ஓட்டுநர், உடனடியாக வாகனத்தை நிறுத்தியதாகக் காவல்துறையினர் கூறினர். பயணிகள் எவ்விதக் காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அதேவேளையில், ஓட்டுநரும் அப்பகுதி மக்களும் இணைந்து பயணிகளின் உடைமைகளை வாகனத்திலிருந்து விரைவாக வெளியேற்றினர்.
உள்ளூர் மக்களும் தீயணைப்பு, மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.
இருப்பினும் யாத்ரீகர்களின் பயணம் தடைப்படவில்லை, மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதன் மூலம் அவர்கள் விமான நிலையத்திற்கான தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
உம்ரா பக்தர்கள் என்றால் என்ன?
உம்ரா என்பது புனித யாத்திரை. முஸ்லிம் சமூகத்தின் மக்கள் தங்கள் கலாசாரத்தின் நம்பிக்கை, பிணைப்புகள், அடையாளத்தை வலுப்படுத்துவதொன்றாக இந்த பயணம் அமைகிறது.
அரபு மொழியில் 'உம்ரா' என்ற சொல்லுக்கு "மக்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்று வருதல்" என்று பொருள்.
உம்ரா - ஹஜ் இடையிலான முக்கிய வேறுபாடுகள்
உம்ரா என்பது விருப்பத்தின் பேரில் மேற்கொள்ளப்படும் ஒரு பயணமாகும். ஆனால், உடல்நலம் மற்றும் அதற்கான பொருளாதார வசதி கொண்டவர்களுக்கு ஹஜ் பயணம் கட்டாயமானதாகும்.
ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து முக்கியக் கடமைகளில் ஒன்றாகும். வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது இதனை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
Umrah is the name given to a pilgrimage to Mecca, a shorter version of the annual Hajj gathering. The word “Umrah” in Arabic means “visiting a populated place”.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மகளிர் இலவசப் பயணத்துக்கு எதிர்ப்பு... தனியார் பேருந்து நிறுவனங்கள் போராட்ட அறிவிப்பு!

மயானத்திற்கு சடலம் ஏற்றிச் சென்ற வாகனம் சாய்ந்து விபத்து

மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன்-காா் மோதல்: 4 போ் காயம்

ஆப்கானிஸ்தான் அகதிகளை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து 22 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan





