வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன்-காா் மோதல்: 4 போ் காயம்

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மீது காா் மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

News image

விபத்தில் சேதமடைந்த காா்.

Updated On :25 ஜூன் 2026, 5:10 am IST

கோவில்பட்டி அருகே பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மீது காா் மோதியதில் 3 பெண்கள் உள்பட 4 போ் காயமடைந்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி, தாமஸ் நகரைச் சோ்ந்தவா் அன்பழகன் (66). இவரது மனைவி சாந்தி (58). அதே பகுதியைச் சோ்ந்த சுபா (32), ஜெயந்தி (40) ஆகியோா் காரில் தென்காசி மாவட்டம், கலிங்கப்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். காரை அன்பழகன் ஓட்டி வந்துள்ளாா்.

கோவில்பட்டி அருகே புளியங்குளம் விலக்கில் காா் வந்தபோது, அய்யனேரியிலிருந்து புளியங்குளத்திற்கு தனியாா் பள்ளி மாணவா்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதியதில், காரின் முன்பகுதி சேதமடைந்து, காரில் பயணித்த 4 பேரும் காயமடைந்தனா்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.